search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இந்து பிரமுகர்கள்"

    அச்சுறுத்தல் காரணமாக கோவை, திருப்பூர் மாவட்டத்தில் இந்து இயக்க தலைவர்கள் 49 பேருக்கு துப்பாக்கி போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. #ArjunSampath
    கோவை:

    இந்து முன்னணி செய்தி தொடர்பாளர் சசிகுமார் கடந்த 2016-ம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக சாய்பாபா காலனியை சேர்ந்த முபாரக், சதாம் உசேன், சுபேர், அபுதாகீர் ஆகிய 4 பேரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்தனர்.

    இந்த சம்பவத்தையடுத்து அச்சுறுத்தல் உள்ள இந்து இயக்க தலைவர்களுக்கு 24 மணிநேர துப்பாக்கி போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதன்படி திருப்பூர் மாவட்டத்தில் இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணி, மாநில செயலாளர்கள் கிஷோர்குமார், தாமு வெங்கடேசன் உள்பட 12 பேருக்கு துப்பாக்கி போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது. இதுதவிர அவரது வீடுகளுக்கும் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    இதேபோல் கோவை மாவட்டத்தில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் மற்றும் இந்து இயக்க தலைவர்கள் மூகாம்பிகை மணி, குணா, சதீஷ், சுரேஷ், இளங்கோ, குளத்துபாளையம் சிவலிங்கம், ரத்தினபுரி சிவலிங்கம் உள்பட 37 பேருக்கு துப்பாக்கி போலீஸ் பாதுகாப்பு போடப்பட் டுள்ளது.

    இதுதவிர முக்கிய பிரமுகர்கள் ஒருசிலர் வீடுகளுக்கும் 24 மணிநேர போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தற்போது இவர்களுக்கு பாதுகாப்பு மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
    முஸ்லிம் மதத்தை பற்றி தவறாக கூறியதால் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் உள்பட சில பிரமுகர்களை கொல்ல சதி திட்டம் தீட்டினோம் என்று ஐ.எஸ். பயங்கரவாதி போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். #ArjunSampath
    கோவை:

    இந்து இயக்க தலைவர்களை கொலை செய்யும் சதிதிட்டத்துடன் சென்னையில் இருந்து ரெயிலில் கோவைக்கு 5 பேர் வருவதாக உளவுத்துறையினர் கண்டுபிடித்து தகவல் கொடுத்தனர். அதன்பேரில் கோவை போலீசார் நேற்று கோவை ரெயில் நிலையத்தில் அதிரடி சோதனை நடத்தினார்கள்.

    அப்போது சென்னையில் இருந்து கோவை வந்த கும்பலை போலீசார் மடக்கிப் பிடித்தனர். விசாரணையில் அவர்கள் சென்னை வியாசர்பாடியை சேர்ந்த ஜாபர்சாதிக் அலி, திண்டிவனம் இஸ்மாயில், பல்லாவரம் சம்சுதீன், ஓட்டேரி சலாவுதீன் மற்றும் இவர்களை அழைத்து செல்ல வந்த கோவையை சேர்ந்த ஆசிக் என்பது தெரியவந்தது.

    இவர்கள் இந்து மக்கள் கட்சி(தமிழகம்) நிறுவன தலைவர் அர்ஜூன் சம்பத், சக்திசேனா நிறுவனர் அன்பு மாரி உள்ளிட்ட இந்து இயக்க பிரமுகர்களை கொலை செய்யும் சதி திட்டத்துடன் வந்தது தெரியவந்தது. இதையடுத்து 5 பேரையும் கைது செய்தனர்.


    கைதான இஸ்மாயில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்பில் ரகசிய உறுப்பினராக உள்ளார். இவர் ஐ.எஸ்.ஐ.எஸ். பற்றிய தகவல்களை பேஸ்புக்கில் பதிவு செய்து வந்துள்ளார்.

    இவரது இருசக்கர வாகனத்தின் முன்புறம் ‘இஸ்லாமிக் ஸ்டேட் ஆப் இந்தியா அன்ட் ஜம்மு காஷ்மீர்’ என்ற ஸ்டிக்கரை ஒட்டி உள்ளார். இவர் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

    எனக்கு பேஸ்புக் மூலமாக கோவையை சேர்ந்த ஆசிக் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு அறிமுகமானார். இதேபோல சம்சுதீன், ஜாபர் சாதிக் அலி, சலாவுதீன் ஆகியோருடன் ஒருமித்த கருத்தின் அடிப்படையில் எனக்கு பழக்கம் ஏற்பட்டது. நாங்கள் அனைவருமே ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் மீது ஈடுபாட்டோடு இருந்ததால் நண்பர்களானோம்.

    எங்களது மதத்துக்கு எதிராக பேசுபவர்களையும், சமூக வலைதளங்களில் பதிவுகள் செய்பவர்களையும் கண்காணித்து வந்தோம். இதில் அர்ஜூன் சம்பத், அன்புமாரி ஆகியோர் வெறுப்பேற்றும் வகையில் பேசியும், பேஸ்புக்கில் பதிவு செய்து வருவதாக ஆசிக் கூறினார்.

    அவர்கள் இருவரையும் கொல்வது என முடிவு செய்தோம். அர்ஜூன் சம்பத் அடிக்கடி டி.வி.க்களில் பேசி வருவதால் அவரை தெரியும். அன்புமாரியின் புகைப்படத்தை ஆசிக் எங்களுக்கு அனுப்பினார். இருவரையும் கொலை செய்ய ஆசிக்கை சென்னைக்கு வரச் சொன்னோம்.

    ஆனால் ஆசிக் எங்களை கோவை வரச் சொன்னார். கொலைக்கான ஏற்பாடுகளை செய்து தருவதாகவும், இத்திட்டத்துக்கு உக்கடத்தை சேர்ந்த ஆட்டோ பைசல், குனிய முத்தூரை சேர்ந்த அன்வர் ஆகியோர் அனைத்து உதவிகளும் செய்வதாகவும் கூறினார்.

    சம்பவத்தன்று நாங்கள் ரெயிலில் கோவை வந்தோம். ஆனால் எங்களை அழைத்து செல்ல ஆசிக் ரெயில் நிலையத்துக்கு குறித்த நேரத்துக்கு வரவில்லை. செல்போனில் தொடர்பு கொண்ட போது கொஞ்சம் நேரமாகிவிட்டது, நீங்கள் நால்வரும் நேராக வீட்டுக்கு வாருங்கள் என ஆசிக் கூறினார்.

    நாங்கள் ரெயில் நிலையத்தில் இருந்து பின்வாசல் வழியாக ஆசிக் வீடுநோக்கி நடந்து சென்றபோது, எதிரே மோட்டார் சைக்கிளில் ஆசிக் வந்துவிட்டார். அப்போது போலீசார் எங்களை பிடித்து விட்டனர்.

    இவ்வாறு அவர் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.

    கைதானவர்கள் பயன்படுத்திய 6 செல்போன்கள், ஆசிக்கின் மோட்டார் சைக்கிளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் ஆசிக் மறைத்து வைத்திருந்த கொலை முயற்சிக்கு தேவையான 5 அரிவாள்களை பறிமுதல் செய்தனர்.

    பின்னர் 5 பேர் மீதும் உபா சட்டம் (யு.ஏ.பி.ஏ.- சட்ட விரோத நடவடிக்கை தடுப்பு சட்டம்), மதகலவரத்தை தூண்டும் வகையில் குற்றச்செயல்களில் ஈடுபடுவது, அரசுக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்படுவது, கூட்டுசதி, சட்டவிரோதமாக கூடுதல் உள்ளிட்ட 7 பிரிவு களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து 5 பேரையும் நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தி கோவை ஜெயிலில் அடைத்தனர்.

    இவ்வழக்கில் தலைமறைவாக உள்ள உக்கடத்தை சேர்ந்த பைசல், குனியமுத்தூரை சேர்ந்த அன்வர் ஆகியோரை பிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. போலீசார் அவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

    கைதான 5 பேரும் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்துள்ளனர். இது தொடர்பாக 5 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க தேசிய புலனாய்வு பிரிவு (என்.ஐ.ஏ.) போலீசார் திட்டமிட்டுள்ளனர். ஏற்கனவே கோவையில் இந்து முன்னணி பிரமுகர் சசிக்குமார் கொலை வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தி வரும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் இந்த 5 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்கும்போது கூடுதல் தகவல்கள் வெளியாகும் என கூறப்படுகிறது. #ArjunSampath
    ×